ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல வருடங்களுக்கு முன் பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த படம் - ஜீவா. தற்போது அதே பெயரில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. ஜீவா படத்தை ஆர்யாவின் ஆடிட்டர் சண்முகத்தின் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் நிறுவனத்துடன் இணைந்து சுசீந்திரனின் வெண்ணிலா கபடி டீம் தயாரித்திருக்கிறது.
ஜீவா படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நடிகர் ஆர்யா பார்ட்னராக சேர்ந்து கொண்டார். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் பார்ட்னரானதை கேள்விப்பட்ட நடிகர் விஷால் ஜீவா படத்தை வாங்கி தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் தமிழகம் முழுக்க வெளியிட உள்ளார். தான் நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்த விஷால், இன்னொரு நடிகர் நடித்த படத்தை வாங்கி வெளியிடுவது ஏன்?
கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையைக் கேட்டதும் இதில் நானும் இணையவேண்டும் என்று விரும்பினேன். இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். தரமான ஒரு படைப்பாக ஜீவா வந்துள்ளது. அவன் இவன் படம் எனக்கு எப்படி திருப்புமுனையாக இருந்ததோ அதேபோல், விஷ்ணுவுக்கு இந்தப் படம் திருப்புமுனைப்படமாக அமையும். அப்படிப்பட்ட இந்த படைப்பில் எனது பெயரும் பதியவேண்டும் என்பதாலேயே இப்பட தயாரிப்பில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்! மற்றபடி வியாபாரம், பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் இல்லை என்று விளக்கம் தருகிறார் விஷால்!