ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஈரம், மிருகம், அரவாண் என சில படங்களில் நடித்தவர் ஆதி. தன்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் பெரிய எதிர்பார்ப்புடன் நடித்த அரவாண் படம் தோல்வியடைந்ததால் ஆதியின் வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டையாக அமைந்தது. அதோடு அடுத்தபடியாக படவாய்ப்புகள் இல்லாததால் தனது தாய்மொழியான தெலுங்கிற்கு சென்று சில படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது யாகவராயினும் நா காக்க என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தை ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் இயக்குகிறார். ஒரு சின்ன வார்த்தைகூட மிகப்பெரிய பிரச்சினையில் கொண்டு விடும் என்ற கருத்து அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் ஆக்ஷன் ரோலில் நடித்திருக்கிறார் ஆதி. இந்த படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொல்லும் அவர், அடுத்து எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை.
மாறாக, தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் என்ற காமெடி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதுவரை நான் பல படங்களில நடித்தபோதும் காமெடி ரோலில் எந்த படத்திலும் நடித்ததில்லை. அதுவும் இது முழுநீள காமெடி படம் என்பதோடு செண்டிமென்ட் கலந்த கதை என்பதால், இப்படம் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு புதிய அங்கீகாரத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஆதி.