நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
நடிகை அஞ்சலியின் சித்தி மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற அப்பாவி உதவி இயக்குநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறு சிராய்ப்புடன் தப்பித்த களஞ்சியம் முதலில் ஓங்காலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே முதல் உதவி செய்யப்பட்டு, பின்னர் திருச்சிக்கு வந்து, தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
இந்த விபத்தை வைத்து அஞ்சலியிடமிருந்து பல லட்சங்களை கறக்க திட்டமிட்டார் களஞ்சியம். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கடந்தகால நினைவுகள் இல்லாமல் போய்விட்டதாகவும், அவர் உயிர் பிழைப்பதே சந்தேகம் என்றும், எத்தனை மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்களுக்கே தெரியாது என்றும் பொய்யான செய்தியை தன் பி.ஆர்.ஓ. மூலம் பரப்பினார்.
களஞ்சியத்தின் நண்பர்கள் என்ற பெயரில் ஊர் பேர் இல்லாமல் மொட்டைக்கடுதாசி போல் ஒரு அறிக்கையை அனுப்பி மீடியாக்களில் வெளி வைத்தனர். இதற்கிடையில் திருச்சியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், களஞ்சியத்துக்கு சிறு சிராய்ப்புதான்..மற்றபடி அவர் நார்மலாக இருக்கிறார் என்ற உண்மையை போட்டு உடைத்தனர். அதோடு அவரை ஜெனரல் வார்டுக்கும் மாற்றினர். தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் களஞ்சியத்தின் இந்த கபட நாடகத்தை அறிந்து கொண்ட அஞ்சலி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து அவரிடம் கேட்டால், "இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளாராம். விபத்தை காரணம் காட்டி தான் போட்ட நாடகம் இப்படி ப்ளாப் ஆகிவிட்டதே கவலையில் இருக்கிறாராம் களஞ்சியம்.