ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
த ஷோ பீப்பிள் என்ற தன் பட நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் - 'அமரகாவியம்'.
விஜய் ஆண்டனி நடித்த நாம் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. படம் தியேட்டருக்கு வரும் முன் இப்படத்தை தனது நெருங்கிய நணபர்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினார் ஆர்யா. அதன்படி சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் சிலரை அழைத்து அமரகாவியம் படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். ஆர்யா
'அமரகாவியம்' படத்தை பார்க்க ஆர்யாவினால் அழைக்கப்பட்டவர்களில் ஆர்யாவின் நெருங்கிய தோழி நயன்தாராவும் முக்கியவமானவர்! 'அமரகாவியம்' படத்தை பார்த்து நயன்தாரா மிகவும் ரசித்தது மட்டுமல்ல, ரொம்பவும் ஃபீல் பண்ணினாராம். படத்தை பார்த்து முடித்ததும், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் அவரை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றதாகச் சொல்லி கண் கலங்கினாராம்!
அது மட்டுமல்ல அமரகாவியம் படம் பார்த்து, ஒரு வார காலம் கழித்து படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கரை தொடர்பு கொண்டாராம். எதற்கு? ''படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் இன்னும் என் மனதில் இருந்து போகவேயில்லை. என்னை ரொம்பவும் ஃபீல் பண்ண வைத்த ஒரு படம் 'அமரகாவியம், கன்கிராட்ஸ்''
என்று இயக்குநருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் நயன்தாரா!