ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமண தம்பதிகளான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும், ''மது மாது சூது'' என்ற படத்தில் இணைந்து பாடி உள்ளனர். இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை பற்றிய ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது. அதனை ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவர் மனைவியும் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதிய இசை அமைப்பாளர் சத்யா இருவரையும் அணுக எந்த சம்பளமோ சன்மானமோ இல்லாமல் இருவரும் பாடிக் கொடுத்துள்ளனர். பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.
போதை பழக்கத்தால் சீரழியும் ஒரு இளைஞனின் கதை. இந்தப் படம் ஒரே இரவில் ஒரு மதுபாரில் நடக்கிற சம்பவங்களை கொண்டு ஹேங்கோவர் பட பாணியில் இது தயாராகி வருகிறது. ராஜசந்துரு தயாரித்து, இயக்கி, நடிக்கிறார்.