ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் இளையராஜா உள்ளிடட இசையமைப்பாளர்கள் தங்களது இசையில் தாங்களே படத்துக்கு ஒரு பாடல் வீதம் பின்னணி பாடி வந்தனர். ஆனால், இப்போது இசையமைப்பாளர்கள் அதிகமாக பாடுவது குறைந்து விட்டது. அதேசமயம் ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரின் இசையில் பாடும் கலாசாரம தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தற்போதைய இளவட்ட இசையமைப்பாளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, தமன், விஜய் ஆண்டனி, அனிருத், இமான் உள்ளிட்ட பலர் மற்றவர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வகையில், டி,இமான் இசையில் என்னமோ ஏதோ படத்திலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வடகறி படத்திலும் பாடியிருந்தார் அனிருத்.
அதைத் தொடர்ந்து இப்போது, ஷங்கர் இயக்கத்தில விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத். ஏற்கனவே தனுஷ் நடித்த மரியான் படத்தில் கொம்பன் சுறா என்ற பாடலை யுவன் ஷங்கரை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தனக்கு ஒரு பாடல் பாடி தர வேண்டும் என்று சொன்னதும், கத்தி பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு, ரஹ்மானின் இசையில் ஓடோடிச்சென்று பாடிக்கொடுத்திருக்கிறார் அனிருத்.
இதையடுத்து எனது பேவரிட் மியூசிக் டைரக்டரின் இசையில் பாடி விட்டது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தனது மனநிலையை பகிர்ந்து கொண்டுள்ளார் அனிருத்.