இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
முன்பெல்லாம் இளையராஜா உள்ளிடட இசையமைப்பாளர்கள் தங்களது இசையில் தாங்களே படத்துக்கு ஒரு பாடல் வீதம் பின்னணி பாடி வந்தனர். ஆனால், இப்போது இசையமைப்பாளர்கள் அதிகமாக பாடுவது குறைந்து விட்டது. அதேசமயம் ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரின் இசையில் பாடும் கலாசாரம தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தற்போதைய இளவட்ட இசையமைப்பாளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, தமன், விஜய் ஆண்டனி, அனிருத், இமான் உள்ளிட்ட பலர் மற்றவர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வகையில், டி,இமான் இசையில் என்னமோ ஏதோ படத்திலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வடகறி படத்திலும் பாடியிருந்தார் அனிருத்.
அதைத் தொடர்ந்து இப்போது, ஷங்கர் இயக்கத்தில விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத். ஏற்கனவே தனுஷ் நடித்த மரியான் படத்தில் கொம்பன் சுறா என்ற பாடலை யுவன் ஷங்கரை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தனக்கு ஒரு பாடல் பாடி தர வேண்டும் என்று சொன்னதும், கத்தி பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு, ரஹ்மானின் இசையில் ஓடோடிச்சென்று பாடிக்கொடுத்திருக்கிறார் அனிருத்.
இதையடுத்து எனது பேவரிட் மியூசிக் டைரக்டரின் இசையில் பாடி விட்டது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தனது மனநிலையை பகிர்ந்து கொண்டுள்ளார் அனிருத்.