ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அலைபாயுதே' படத்தில் அறிமுகமான மாதவன் ஒரே படத்தில் எண்ணற்ற பெண் ரசிகைகளைப் பெற்றார். 'ரன்' படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரமெடுத்தவர், அடுத்து எங்கேயோ போய்விடுவார் என்று எதிர்பார்த்த சமயத்தில், தவறான படங்களின் தேர்வால் காணாமலே போய்விட்டார். பின்னர், ஒரு சில இந்திப் படங்களில் நடித்து நானும் இருக்கிறேன் என இருந்தார். ஆனால், தமிழ் சினிமா பக்கம் திரும்பாமலே போய் விட்டார்.
இப்போது மணிரத்னத்தின் உதவியாளரும், ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த 'துரோகி' படத்தை இயக்கிய பெண் இயக்குனரான சுதா , தமிழ், இந்தியில் இயக்க உள்ள 'லால்' படத்தில் பாக்ஸராக நடிக்கிறார். இந்த படத்திற்காக கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலேயே தங்கியிருந்து முறையான பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் பிரபல குத்துச் சண்டை வீரரான முகம்மது அலியின் வாழ்க்கையைத் தழுவி, கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கப்பட உள்ள படமாம். அவரது கதாபாத்திரத்தில்தான் மாதவன் நடிக்க உள்ளார். தற்போது பாலிவுட்டில் பல பாக்சிங் படங்கள் தயாராகி வரும் சூழலில் தனது படமும் சிறப்பாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் மாதவன் கடுமையாக பயிற்சி செய்து வருகிறாராம்.
இத்தனை மாத பயிற்சியில் மாதவன் நிறையவே மாறிவிட்டாராம். “தொடர்ந்து கடுமையான பயிற்சியில் எனது உடலமைப்பையே மாற்றிவிட்டேன். எனது உடலும், உடல் மொழியும் முற்றிலும் மாறிவிட்டது. நடந்தாலும், பேசினாலும், நினைத்தாலும் என்னை ஒரு பாக்சராகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் பிரேக் தேவைப்படுகிறது. அவர்களை மீண்டும் புதிதாக புதுபபித்துக் கொள்ள அது வாய்ப்பாக அமைகிறது. இல்லையென்றால் நம்மை நாமே இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்னை சோதித்துக் கொள்ள எனக்கும் நேரம் தேவைப்பட்டது. இப்போது புதிய பயணத்திற்கு தயாராகி விட்டேன் என நினைக்கிறேன்,” என்கிறார் மாதவன்.