ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பில் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம்மேனன் இருவரும் சில நாட்களாக இரவு நேரங்களில் அதே ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.
ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள மவுண்ட் ரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள அப்பகுதியில் அஜீத் பைக் ஓட்டி வருவது போன்று முதலில் சில ஷாட்களை எடுத்த கெளதம்மேனன். பின்னர் அஜீத், வில்லன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியில் சில முக்கிய ஷாட்களை படமாக்கினார்.
மேலும், அனுஷ்கா, சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் அதே ஏரியாவில் படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். மக்கள் போக்குவரத்து மிகுதியான இடம் என்பதால், ரசிகர்களை படப்பிடிப்பு நடக்கும் எல்லைக்குள் நெருங்க விடாமல் இருக்க பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.