ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்கேயும் எப்போதும் சரவணனின் உதவியாளர் ராம் பிரகாஷ். தனிக்கடைபோட்டு இயக்கி வரும் படத்தின் பெயர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'. செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் ஒலிக்கும் பெண்ணின் குரலையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை விளக்குகிறார் ராம் பிரகாஷ்.
"தலைப்பே மக்களை திரும்பி பார்க்க வைக்கிற மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணினோம். அதே நேரத்துல கதைக்கும் தொடர்புடையதாக இருக்கணும். அதுக்குத்தான் இந்த தலைப்பு. இது டெலிபோன் தொடர்புடைய கதையல்ல. ஆனாலும் தலைப்பின் குரலால் படத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழும்.
இயற்கை பேரழிவுகள் நம் கண்முன்னால் நடக்கிறது. கண்ணுக்கு தெரியாமல் நடக்கிற பேரழிவைப் பற்றிய கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ். அட்டகத்தி தினேசும், நகுலும் ஹீரோக்கள், பிந்து மாதவியும் புதுமுகம் ஐஸ்வர்யாவும் ஹீரோயின்கள். காதல், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த கமர்ஷியல் கதை" என்கிறார் ராம் பிரகாஷ்.