ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த்திரைத்துறையில் இதுவரை இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டிங் போன்ற துறைகளுக்குத்தான் பட்டயப்படிப்புகள் உள்ளன. பாடல் எழுதுவதற்கென்று எந்த படிப்பும் இருந்ததில்லை. ஆனால் முதன்முறையாக திரைப்படப் பாடல் எழுதுவது எப்படி என்பதை முறையாக பயிற்சி கொடுக்க தமிழ்த்திரைப்பாக்கூடம் என்றொரு பட்டயப் படிப்புக்கான பயிற்சி கூடத்தை நிறுவியுள்ளார் கவிஞர் ப்ரியன்.
இந்த திரைப்பாக்கூடத்தில் பாடல் எழுத பயிற்சி பெறும் மாணவர்களுக்கு திரைப்பட பாடலாசிரியர்களைக்கொண்டே பயிற்சி கொடுப்பதோடு, விஜய்ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்களையும் பயிற்சி கூட மாணவர்களிடம் கலந்துரையாட வைத்து, மெட்டுக்கேற்ப எப்படி பாடல்களை எழுதுவது என்றும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறதாம். அதோடு, இசையமைப்பாளர்களிடமிருந்து மெட்டுக்களை வாங்கி, அதற்கு பயிற்சி பெறுபவர்களை பாடல் எழுத வைத்து, அந்த பாடலை பிரபல பாடகர்-பாடகிகளை வைத்தே பதிவு செய்தும் கொடுக்கப்படுகிறதாம். ஆக, ஒரு முழுமையான பாடலாசிரியராக அவர்களை உருவாக்கி அனுப்புகிறாராம் ப்ரியன்.
இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ்த்திரைப்பாக்கூடத்தில் தமிழகத்திலுள்ள ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்பவர், சிறந்த அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களை உருவாக்குவதே இந்த பயிற்சி கூடத்தின் தலயாய நோக்கம் என்கிறார்.