ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடி ஆகிய காரணங்களினால் வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது என்று செய்திகள் வந்தநிலையில், தற்போது அப்படம் குறித்து புதிய தகவல். வாலு பட வேலைகள் பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து வந்தன. தன் எதிர்காலமே அந்தப்படம்தான் என்பதால் எல்லா சிரமங்களையும் கஷ்டப்பட்டு பொறுத்துக்கொண்டார் வாலு படத்தின் இயக்குநரான விஜய்சந்தர். வருடங்கள் பல கடந்தும் தயாரிப்பாளர் வாலு படத்தை முடிப்பதில் அக்கறை செலுத்தவில்லை. நாயகன் சிம்புவோ நடிகைகளை துரத்திக் கொண்டிருந்தார். பொறுத்ததுபோதும் என்று பொங்கி எழுந்த விஜய் சந்தர், ஜெய்யை வைத்து வேறு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்க... இந்த விஷயம் வாலு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் கவனத்துக்குப்போக, வாலு படத்தை உடனே முடித்து ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டாராம். அதன் முதல் கட்டமாக, பெல்ஜியம் நாட்டுக்கு சென்று வாலு படத்தின் மூன்று பாடல்காட்சிகளை எடுத்து வரும்படி இயக்குநரிடம் கூறி இருக்கிறாராம்.