ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர் தற்போது சோக்கு சுந்தரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராமசாமி என்பவர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்த செளஜன்யா நாயகியாக நடித்து வருகிறார். இது இவருக்கு தமிழில் முதல் படம் என்பதால் இதன்பிறகு கோடம்பாக்கத்தில் ஆழக்காலூன்றி விட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.
தற்போது சோக்குசுந்தரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பவானியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள காவிரி ஆற்றில் உள்ள பாறையில் நாயகன் ராமசாமி- நாயகி செளஜன்யா இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வழுக்குப்பாறையில் செளஜன்யா மிதித்து விட்டதால், தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து விட்டாராம்.
இதையடுத்து அந்த பகுதியில் படகு ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்களாம். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் தத்தளித்த செளஜன்யா ஆற்று தண்ணீரையும் குடித்து விட்டாராம். அதனால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு முதலுதவி கொடுத்தவர்கள், அவரது கால் முட்டியிலும் அடிபட்டு ரத்தம் கசிந்ததால் அதற்கும் சிகிச்சை அளித்தார்களாம். அதனால் அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு கொடுத்து பின்னர் வேறு லொகேஷனை மாற்றி அதே ரொமான்ஸ் காட்சியை படமாக்கினாராம் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர்.