ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தில் அறிமுகமானவர் நவ்நித் கவுர். அதையடுத்து கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரத்தில் அம்பாணி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் அவர் நடித்து வந்த தெலுங்கிலும் படங்கள் இல்லாததால் 2011ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்டார். அதோடு, காங்கிரஸ் கட்சி மீது ஈடுபாடு கொண்ட நவ்நித் கவுர் அக்கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆபாச படங்கள் இணையதளங்களில் பரவியிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் நவ்நித் கவுர். அப்படி வெளியான படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிற்கும் அனுப்பட்டு வருவதால், இளைய சமுதாயத்திடம் அவரது ஆபாச படங்கள் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
அதனால், எனது இமேஜை கெடுக்கும் வகையில் யாரோ விஷமிகள் என்னை ஆபாசமாக சித்தரித்து படங்களை இணையதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். அதனால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசில் நவ்நித் கவுர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நவ்நித்தின் ஆபாச புகைப்படங்களை பரப்பி விட்டவர்களை கண்டுபிடிக்க, சைபர் க்ரைம் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.