ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீகாந்த் நாயகனாக அறிமுகமான ரோஜாக்கூட்டம் படத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் பூமிகா. அதையடுத்து, தமிழில் விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்த பூமிகா, தங்கர்பச்சான் இயக்கத்தில பிரபுதேவாவுக்கு ஜோடியாக களவாடிய பொழுதுகள் என்ற படத்திலும் நடித்தார். ஆனால், அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போஜ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளிலும் நடித்து வந்த பூமிகா, 2007ல் யோகா மாஸ்டர் பரத்தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனபோதும், நடிப்புக்கு முழுக்கப்போடவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பூமிகா, கடந்த ஆண்டில் கர்ப்பமானதால் அதையடுத்து நடிப்பதை தள்ளி வைத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அதனால் சந்தோசத்தில் திளைத்திருக்கும் பூமிகாவை, அவரது சினிமா நண்பர்கள், தோழிகள் என பலரும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்களாம். ஆக, திருமணத்திற்கு பிறகும் 5 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த பூமிகா, அடுத்த ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.