ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புவிடம் ஒரு கதையை சொன்னால், அதை முழுவதும் கேட்டு விட்டு, கடைசியில் தன்னிடமுள்ள ஒரு கதையை டைரக்டர்களிடம் சொல்லி, இதை பண்ணுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கதையையே மாற்றி விடுவாராம் மேலும், படப்பிடிப்பில் டைரக்டர் என்ன சொன்னாலும், அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படிதான் நடிப்பாராம். கேட்டால் எனக்குள்ளும் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவர் சொல்வதைதான் வெளியில் இருக்கிற இந்த சிம்பு செய்வார் என்று சிம்பு சொல்வதாக அவரைப்பற்றி பரவலாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது.
ஆனால், இப்போது கதையே சொல்லாத சில இயக்குனர்களின் படங்களில்கூட நடித்து வருகிறார் சிம்பு. குறிப்பாக, துருவநட்சத்திரம் படத்தில் சூர்யாவை ஒப்பந்தம் செய்து அலுவலக பூஜையும நடத்திய கெளதம்மேனன், படப்பிடிப்புக்கு செல்ல தேதியை சொல்லும் வரை முழுக்கதையையும் சொல்லவில்லை. அதனால்தான் அப்படத்திலிருந்தே வெளியேறினார் சூர்யா. அதன்பிறகுதான் தடுமாறி நின்ற அவருககு கைகொடுக்கும் விதமாக அப்படத்தில் நடித்து முன்வந்தார் சிம்பு.
அதேபோல், ஆர்யா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை இயக்கிய செல்வராகவனுக்கும் கைகொடுத்துள்ளார் சிம்பு. அந்த படம் பெரிய அளவில் சறுக்கி விட்டதால், செல்வராகவனின் சமீபத்தில் தோல்வி படங்களை வரிசைப்படுத்திய முன்னணி ஹீரோக்கள் அவரது அடுத்த படத்தில் நடிக்க முன்வரவில்லை. குறிப்பாக, செல்வராகவனிடம் சிந்துபாத் என்ற கதையை கேட்டு நடிக்க சம்மதம் சொல்லியிருந்த விக்ரம் இப்போது கைவிரித்து விட்டாராம்.
ஆக, சூர்யாவினால் கைவிடப்பட்ட கெளதம்மேனனுக்கு கைகொடுத்த சிம்புவே, இப்போது விக்ரமினால் கைவிடப்பட்ட செல்வராகவனுக்கும் கைகொடுத்துள்ளார். இதையடுத்து, இதுவரை சிம்பு மீது அதிருப்தியில் இருந்து வந்த கோலிவுட் இயக்குனர்கள் தாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் கட்டுக்கதை, சிம்பும் டைரக்டர்களின் நடிகர்தான் என்று அவருக்காக ரெடி பண்ணி வைத்திருந்த கதைகளை தூசு தட்டிக்கொண்டு அவரைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.