ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் சரண்யா. அதன்பிறகு மனசுக்குள் மத்தாப்பு உள்பட பல படங்களில் நடித்தவர், பின்னர் கல்யாணம் குழந்தை குட்டி என்று செட்டிலானவர். பல ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார். முதலில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் பின்னர் மனோரமா ஆச்சி நடிப்பதை குறைத்துக்கொண்டதால், காலியாகி இருந்த அவரது இடத்தை கைப்பற்றினார்.
சரண்யாவின் யதார்த்தமான நடிப்பு சில படங்களில் ஒர்க்அவுட் ஆனதோடு, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினையும் பெற்றார். அதையடுத்து கோடம்பாக்கத்தின் சிறந்த அம்மா நடிகையாகிவிட்ட சரண்யா, இப்போது தான் நடித்து வரும் படங்களில் தனக்கு பக்கம் பக்கமாக டயலாக் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
சில படங்களில் அம்மா கேரக்டருக்கு குறைவான டயலாக்கை கொடுத்தால், அந்த டைரக்டர்களிடம் உரிமையோடு சண்டையும் போடுகிறாராம். எந்த வீடாக இருந்தாலும் அங்கே அப்பா, பிள்ளைகளைவிட அம்மாதான் அதிகமாக பேசிக்கொண்டேயிருப்பார். அதனால், எனக்குத்தான் அதிக டயலாக் தரவேண்டும் என்று சண்டை போட்டு கேட்டு வாங்கி நடிக்கிறாராம்.
சில சமயங்களில் ஸ்பாட்டில் டயலாக் எழுத டைரக்டர்கள் தடுமாறினால், அந்த காட்சிக்கு ஏற்றபடி தானே வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு பேசத் தொடங்கி விடுகிறாராம். அதிலும் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருக்கிறாராம். இதனால் அவருடன் அதே காட்சியில் நடிப்பவர்கள், இவர் எப்போது பேச்சை நிறுத்துவார். நாம் பேச வேண்டிய டயலாக்கை பேசுவது என்பது புரியாமல் குழம்பிப்போய் நிற்கிறார்களாம்.