ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியல் கட்சி தொண்டர்களே இப்போது தங்கள் தலைவர்களுக்கு கட்அவுட் வைப்பதில்லை. காரணம் உயர்நீதி மன்றம் கட்அவுட்களுக்கும், பிரமாண்ட போர்டு விளம்பரங்களுக்கும் தடை விதித்துள்ளது. அண்மையில் கூட பேனர்கள் வைக்ககூட அனுமதி வாங்க வேண்டும் என்ற கோர்ட் கூறியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் அடங்கிக் கிடந்த கட்அவுட் கலாச்சாரம் இப்போது மீண்டும் எழுந்து வந்துள்ளது.
சமீபத்தில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரமும் ரிலீசானது. எட்டு வருடங்களுக்கு பிறகு அஜீத், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீசானதால் இரண்டு ரசிகர்களுமே கொண்டாட்டத்தில் திளைத்தார்கள். அந்த ஆர்வத்தில் தங்கள் ஆஸ்தான நடிகர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கட்அவுட்கள் வைத்து மீண்டும் கட்அவுட் கலாச்சாரத்திற்கு விதை போட்டுவிட்டார்கள். சென்னையில் விஜய்க்கு 80 அடியிலும், நெல்லையில் அஜீத்துக்கு 90 அடியிலும் கட்அவுட் வைத்து தங்கள் விசுவாசத்தை காட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அஜீத் தன் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார்.
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் பல இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். பல இடங்களில் வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்கியிருக்கிறது. இருபடத்தையும் வரவேற்றும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் சுவரொட்டிகளை ஒட்டித் தீர்த்தார்கள். சில ஊர்களில் போஸ்டர் வைக்க இடம் பிடிப்பதிலும் கட்அவுட் வைக்க இடம்பிடிப்பதிலும் மோதல் நடந்து விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்றிருக்கிறது.
பொதுவாக ரசிகர் மன்றம் என்பது சம்பந்தப்பட்ட நடிகரின் மேல் உள்ள அன்பால் என்கிறதெல்லாம் இப்போது மாறிப்போய் உள்ளூரில் தன்னை சக்தி மிக்கவனாக காட்டிக் கொள்ளவும், தனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகவே ரசிகர் மன்றங்கள் துவங்கப்படுகிறது. இரு குழுக்களாக மோதிக் கொள்வதற்காவே இரு பெரும் நடிகர்களின் பெயர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் வீட்டில் அஜீத் கேக் சாப்பிடுகிறார். அஜீத் வீட்டில் விஜய் பிரியாணி சாப்பிடுகிறார். விஜய்க்கு, அஜீத் வாட்ச் பரிசளிக்கிறார். அஜீத்தை தேடிப்போய் விஜய் வாழ்த்து பெறுகிறார். இப்படி அவர்கள் இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாக நட்பாக இருக்கும்போது ரசிகர்கள் மோதிக் கொள்வதும், கட்அவுட் கலாச்சாரத்தை கொண்டு வருவதும் அவர்களின் சொந்த லாபத்துக்குதானே தவிர ஹீரோக்கள் மீது கொண்டுள்ள அன்பால் அல்ல என்பதை ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை தடுக்க இருவருமே சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.