ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுப்பிரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் நடித்தார் ஜெய். அதில் எங்கேயும் எப்போதும் படம் மட்டுமே அவரை பேச வைத்தது. அதையடுத்து இப்போது ராஜாராணியில் அவரது வித்தியாசமான பர்பாமென்ஸ் பேசப்பட்டு வருகிறது. இதனால் இத்தனை நாளும் குடத்தின் விளக்காக இருந்த ஜெய் இப்போது குன்றின் விளக்காகியிருக்கிறார்.
அதோடு, திருமணம் என்னும் நிக்கா, நவீன சரஸ்வதி சபதம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற சில பேசப்படும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் எல்லா படத்திலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நல்லதாக இருந்தால் சிறிய கேரக்டர்களிலும் நடிப்பேன் என்கிறார் ஜெய்.
இதுபற்றி அவர் கூறுகையில், வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நான்கு பேரில் நானும் ஒரு கேரக்டரில் நடிக்க பேசியிருந்தேன். ஆனால் அந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாக உறுதியான பிறகு, அர்ஜூன் சார் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று இயக்குனர் முடிவெடுத்தார். இருப்பினும் இன்னொரு வேடத்தில் நடிக்க விரும்பினேன். அதற்கு அது சிறிய வேடம், வேண்டாமென்று கூறி விட்டார் டைரக்டர்.
என்னைப்பொறுத்தவரை படத்துக்குப்படம் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடுகிறேன். எங்கேயும் எப்போதும், ராஜாராணியில் ரசிகர்களுக்கு பிடித்த ஜெய்யாக நடித்தது போல் இனி படத்துக்குப்படம் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜெய்யாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெய்.