ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. தற்போது மொசக்குட்டி, என்னமோ நடக்குது, புரவி 150சிசி படங்களில் நடித்து வருகிறார். "எப்போதோ நான் ஹீரோயினாகியிருக்க வேண்டியது அமலாபாலால் அந்த வாய்ப்பு போய்விட்டது" என்கிறார் மகிமா. இதுபற்றி அவர் விளக்கமாக கூறியதாவது:
கேரள மாநிலம் காசர்கோடுதான் சொந்த ஊர். அங்கு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் ஊருக்கு சிந்து சமவெளி படத்திற்காக டைரக்டர் சாமி லொக்கேஷன் பார்க்க வந்திருந்தார். அப்போது சிந்து சமவெளியில் என்னை நடிக்க கூப்பிட்டார். நானும், அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தோம். அதன்பிறகு அமலாபால்ங்ற பொண்ணு நடிக்குது. நீ அவுங்களோட தங்கையா நடிக்கிறியான்னு கேட்டார். அதுக்கும் ஒத்துக்கிட்டு போனா நான் அமலாபாலைவிட உயரமா இருந்ததால அதுலேயும் நடிக்க சான்ஸ் கிடைக்கல. அப்புறம் தோழியா நடிக்கச் சொன்னாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டோம்.
அதுக்கு பிறகுதான் சாட்டையில நடிக்க சான்ஸ் கிடைச்சுது. சாட்டை முடிஞ்சதும் பிளஸ்-2 எக்ஸாம் எழுதப்போயிட்டேன். நடிப்பா படிப்பாங்ற குழப்பம் இருந்துச்சு. இப்ப தீவிரமா நடிக்க கிளம்பிட்டேன். தமிழ்ல 3 படம், தெலுங்குல ஒரு படம் நடிச்சிட்டிருக்கேன். ஹோம்லியான கேரக்டர்ல நடிக்க விருப்பம். கொஞ்சம் கிளாமரா நடிக்கலாம்" என்கிறார் மகிமா.