ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி.தயாரிக்கிறது. அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோயினாக நடித்த அத்வைதா இதில் ஹீரோயின் மற்ற அனைவரும் புதுமுகங்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் கோவையில் 25 நாட்கள் முடிந்திருக்கிறது.
"பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதுதான் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் இரண்டு நாட்கள் தவிர எங்களுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. படத்தின் முக்கிய கேரக்டர் ஹீரோயின்தான். அவர்தான் சினேகா. அந்த கேரக்டருக்கு சுமார் 200 பேர் வரை பார்த்து இறுதியாக அத்வைதா தேர்வு செய்யப்பட்டார் அவர் இப்போது கீர்த்தி என்று பெயர் மாற்றி உள்ளார். படத்தின் தலைப்பை பார்த்து விட்டு பலர் இது நடிகை சினேகாவின் கதை என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. கேரக்டர் பெயர் சினேகா என்பதைத் தவிர வேறெந்த தொடர்பும் கிடையாது. ஒரு இளம் பெண்ணின் வாழக்கையில் கடந்து செல்லும் சில ஆண்களைப் பற்றிய கதை. அந்த ஆண்களில் அந்த பெண் யாரை தன் துணையாக தேர்வு செய்கிறாள். ஏன் என்பது மாதிரியான கதை. 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளது" என்றார் இயக்குனர் முத்துராமலிங்கன்.