ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஈரம், மிருகம், அரவான் படங்களில் நடித்தவர் ஆதி. இதில் அரவான் படம் தன்னை முன்னணி ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தும் என்று எதிர்பார்த்தார் ஆதி. ஆனால் அப்படம் தோல்வியடைந்து அவருக்கு பெரிய ஏமாற்றத்தைக்கொடுத்து விட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தெலுங்கு படமொன்றில் நடித்தவர் இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
சென்னையில் நடந்த முக்கிய சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘யாகவராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆதியின் அண்ணன் சத்யபிரபாஷ் இயக்குகிறார். அதுமட்டுமின்றி இப்படத்தில் அரவான் படத்தில் ஆதியுடன் நடித்த பசுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். அதோடு விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட் நாயகியாக நடிக்கிறாராம்.
இதற்கெல்லாம் மேலாக, இந்தி சினிமாவில் பிரபல நடிகரான மிதுன் சக்ரவர்த்தி இப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதனால் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதனால், அரவான் எனக்கு கொடுத்த ஏமாற்றத்தை இந்த படம் ஈடுகட்டும் என்று நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஆதி.