ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சோலார் பேனல் மோசடி தொடர்பாக மம்முட்டியிடம் விசாரணை நடத்த கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர். சோலார் பேனல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், பீஜு ராதாகிருஷ்ணன் - சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் விழா ஒன்றை நடத்தியிருந்தது. இதில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அந்த விழாவில் மம்முட்டிக்கு விருதும், ரூ. 10 லட்சம் பணமும் வழங்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சோலார் மோசடியில் ஈடுபட்ட ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயரிடம் பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். இந்த பட்டியலில் மம்முட்டிக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், மம்முட்டியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மம்முட்டி, விழாவில் கலந்து கொண்டதும், விருது வழங்கியது உண்மை. ஆனால், ரூ. 10 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது என்பது பொய். விழாவில் கலந்து கொண்டதற்காக ரூ. 25 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதையும் ஒரு அனாதை இல்லத்திற்கு நான் கொடுத்து விட்டேன் என்று மம்முட்டி கூறியுள்ளர்.