ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இனி கொலவெறிடி போன்ற பாடல்களை பாட மாட்டேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது இந்தி சினிமா உலகில் நுழைந்து, ராஞ்சனா என்ற படத்தில் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருக்கிறார். அவரது இந்தி அறிமுகப்படமான ராஞ்சனா குறித்து மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கூறுகையில், இந்தி பட வாய்ப்புக்களை நான் தேடவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தி தெரியாதது மற்றும் புதுமுகம் என்ற பிரச்னைகளுக்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்பது தான் முக்கிய பிரச்னை. நான் இந்தி படத்தில் நடிக்க தயாராக இருக்கவில்லை. ஆனால் கதை என்னை கவர்ந்து விட்டது. இதனால் இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு அதிகம் இந்தி தெரியாது. இந்தி தெரிந்து இருந்தால் நடிக்க கூடுதல் வசதியாக இருந்திருக்கும். இந்தி படிக்க நான் வகுப்பு எதற்கும் செல்லவில்லை. இதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மொழி பிரச்னையில் இயக்குனரும், கதாசிரியரும் எனக்கு உதவினர், என்றார்.
கொலவெறிடி பாடல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தனுஷ், 3 தமிழ் படத்தில் நான் நடித்து பாடிய பாடல் கொலவெறிடி. இந்த பாடல் என்னை மனவருத்தமடைய செய்து விட்டது. என்னை துரத்த தொடங்கி விட்டது. நான் எங்கு சென்றாலும், இதை பற்றி தான் பேசுகிறார்கள். இதில் இருந்து நான் வெளிவரவே விரும்புகிறேன். இதுபோன்ற பாடல்களை இனி பாட விரும்பவில்லை, என்றார்.