ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்றவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ். அவரது மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை போலவே பின்னணி பாடகராக மாறி தற்போது பிஸியான பாடகராக வலம் வருகிறார். அது மட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு மீதான ஆர்வத்தால் சில படங்களில் கதாநாயகனாக, வில்லனாக நடித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.
கடந்த 2007ல் தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய் யேசுதாஸ். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016ல் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்தும் அதற்கு பிறகான வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் யேசுதாஸ்.
அவர் கூறும்போது, “எங்களது பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் பாதிக்கப்பட்டவன் என்பதை விட அதிகம் பொறுப்புள்ளவனாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது குழந்தைகளிடம் எப்போதும் சந்தோஷத்தை தக்க வைக்கும் விதமாகவே என்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன். குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா, தனது தாயுடன் இருக்கிறார்களா என்கிற விவரம் எதுவும் வெளியில் நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கே சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள். விவாகரத்து பற்றிய அந்த சோகத்திலேயே இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை.. வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.