திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எல்லாம் தவறாமல் இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு ஹீரோவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்து விடுவதால் பிஸியாக இசையமைத்து வரும் தமன், தற்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஸாப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். பொதுவாக பாடல்களை உருவாக்குவதற்காக வழக்கமாக பணியாற்றும் ஐதராபாத் சுற்றுப்பகுதி இடங்களுக்கோ அல்லது துபாய் போன்ற வெளிநாடுகளுக்கோ செல்வதுதான் தமனின் வழக்கம்.
ஆனால் இந்த முறை பாடல் கம்போசிங்கிற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ளாராம் தமன். இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் மாருதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் ராதே ஷ்யாம் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.