ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதி ஒன்றை நடத்துவதோடு, அவர்களை விளையாட்டு மற்றும் கலைத்துறையில் வளர்த்து வருகிறார். தனது தாயாருக்கும், ராகவேந்திரருக்கும் கோவில் கட்டி உள்ளார்.
இந்த நிலையில் 'மாற்றம்' என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்க உள்ளார். இது வருகிற மே 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அமைப்பை ராகவா லாரன்ஸால் உதவி பெற்று படித்து முன்னேறி இப்போது நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து இதனை நடத்த இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “உதவியால் வென்றவர்கள் மற்றவர்களுக்கு உதவ வருகிறார்கள்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.