'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
புதுக்கோட்டை: மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 'என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என, கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் உடனே தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ‛‛மாற்றம் அமைப்பின் மூலம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம ஒரு விஷயம் செய்யும்போது அதில் மகிழ்ச்சி இருக்கும். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.