ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாளத் திரையுலகுடன் தனது நடிப்புத் எல்லையை சுருக்கிக் கொண்டிருந்தார் நடிகர் பஹத் பாசில். கடந்த இரண்டு வருடங்களில் தமிழில் விக்ரம், மாமன்னன், தெலுங்கில் புஷ்பா என மூன்று படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் இன்னொரு பரிமாணத்தையும் காட்டியுள்ளார். அனேகமாக துல்கர் சல்மானை போல வரும் நாட்களில் இவரும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் ஆடிசனில் தான் கலந்து கொண்டது பற்றி சமீபத்தில் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தின் ஆடிசனில் தான் கலந்து கொள்ள சென்றதாகவும் அங்கே அந்தப்படத்தின் கதை பற்றி எதுவும் சொல்லப்படாமல் நடிக்கும் காட்சிக்கான விளக்கமும் எதுவும் சொல்லப்படாமல் ஒரு காட்சியை நடித்துக் காட்டும்படி கூறினார்களாம். பஹத் பாசிலும் அந்த காட்சியை உள்வாங்கி தனது பாணியில் நடித்துக் காட்டினாராம்.
ஆனால் வேற்று மொழியில் ஒரு முதல் படத்திற்கான ஆடிசனில் கலந்து கொள்வது போல இல்லாமல் அங்கு இருப்பவர்கள் ஆடிசனில் பங்கேற்ற கலைஞர்களை ரொம்பவே ஈசியாக உணருமாறு பார்த்துக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார் பஹத் பாசில். இத்தனை நாட்கள் இதுபற்றி நான் வெளியே சொன்னதே இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகி உள்ளாரா அல்லது ஆடிசனோடு அவரது பங்களிப்பு முடிந்து விட்டதா என்பதை பற்றி அவர் எதுவும் கூறவில்லை.