மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்தே கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியவர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலே இருந்த நிலையிலேயே மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான். முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளில் வைர மோதிரங்கள், காதணிகள், தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளான். மேலும் வீட்டிற்குள் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உடுப்பியில் ஒருவரை கைது செய்துள்ளனர்.