நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்தே கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியவர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலே இருந்த நிலையிலேயே மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான். முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளில் வைர மோதிரங்கள், காதணிகள், தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளான். மேலும் வீட்டிற்குள் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உடுப்பியில் ஒருவரை கைது செய்துள்ளனர்.