ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு |
ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய தினம் வருகிறோம் என 'வல்லவன் வகுத்ததடா' என்ற படம் வெளியாகிறது.
அடுத்து ஏப்ரல் 20ம் தேதி 'பைன்டர், சிறகன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல், தேர்வுகள், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் என கடந்த ஓரிரு வாரங்களாக தியேட்டர்களுக்கு மக்கள் வரவில்லை. தேர்வுகள் ஏறக்குயை முடிந்துவிட்டன. தேர்தலும் இந்த வாரம் முடிந்துவிடும். ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன.
இருந்தாலும் வரும் வாரங்களில் பல படங்கள் வர உள்ளதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.