விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டவர் நடிகர் ராம்சரண். குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 வருடம் கழிந்த நிலையில் கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ‛கிளின் காரா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் போது கிடைத்த இடைவெளியில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பி சென்றனர் ராம்சரண் தம்பதியினர். அங்கே யானை குட்டி ஒன்றை ராம்சரண் குளிப்பாட்டி விடுவதும் குழந்தையுடன் உபாசனா அதை பார்த்து ரசிப்பதுமான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் ராம்சரண்.