நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் மற்றும் என்னும் எப்பொழும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் வினோத். இவர் மம்முட்டி நடித்த கேங்ஸ்டர் படத்திலும் அவருடன் கூடவே வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் தென்னிந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை அதிகாரியாகவும் அரசு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற ரயிலில் பணியில் இருந்த வினோத், ஒடிசாவை சேர்ந்த டிக்கட் இல்லாமல் பயணித்த ஒரு பயணியை அடுத்த ஸ்டேஷனில் இறங்குமாறு கண்டித்துள்ளார்.
மது போதையில் இருந்த அந்த பயணி இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென வினோத்தை தள்ளிவிட்டார். இதில் மரணம் அடைந்த வினோத்தின் உடல் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு ஆற்றுப் பாலத்தின் கீழே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மலையாள திரையுலகில் வினோத்துடன் நன்கு பழகிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது அதிர்ச்சி கலந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.