இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகை சோனு கவுடா. சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதோடு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் எட்டு வயது சிறுமியை தத்தெடுத்திருப்பதாக அறிவித்த சோனு கவுடா அந்த சிறுமியுடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர் சட்டவிரோதமாக அந்த சிறுமியை தத்தெடுத்திருப்பதாக கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை பெற்றோரிடம் இருந்து பணம் கொடுத்து அவர் வாங்கி இருப்பதாகவும் பள்ளிக்கு செல்லும் வயதில் அவரை வீட்டு வேலை செய்ய பயன்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு கவுடாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சோனு கவுடாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் சோனு அடைக்கப்பட்டார். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.