நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர பிரித்விராஜ் டைரக்ஷனில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் மற்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் ஜோஷி இயக்கி வரும் ரம்பான் ஆகிய படங்களில் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.