சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் |
சினி
கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் எழுதிய இயக்கியுள்ள படம்
‛ஒத்த ஓட்டு முத்தையா'. கதையின் நாயகனாக காமெடி நடிகர் கவுண்டமணி
நடித்துள்ளார். முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில்
உள்ள பரணி டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங்
பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய
பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக
பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். கவுண்டமணி ஜோடியாக
ராஜேஸ்வரி என்பவர் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சாய்
ராஜகோபால் கூறியதாவது: ‛‛'ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி
அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே
சம்மதம் தெரிவித்தார். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான
கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் வரும் காட்சிகள்
அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும். கவுண்டமணி-செந்தில்
நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும்
பேசப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.