ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு திரையுலகில் நடிகர் சாய் தரம் தேஜ் கவனிக்கத்தக்க இளம் நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்து வாரிசு நடிகர்களில் ஒருவராக சினிமாவில் அறிமுகமான இவர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகன் ஆவார். தற்போது கஞ்சா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள் பலரும் தங்களது தாய், மனைவி, சகோதரி, மகள் ஆகியோருக்கு ஏதோ ஒரு விதத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தி வந்த நிலையில், சாய் தரம் தேஜ் தன் தாய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய பெயரையே தற்போது மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆம்... சாய் தரம் தேஜ் என்கிற தன்னுடைய பெயரை சாய் துர்கா தேஜ் என தன் அம்மாவின் பெயரும் சேர்ந்து வருமாறு மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தேஜ் என்கிற பெயர் வரும்போது எனது தந்தை குடும்பத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும். அதேபோல எனது தாயின் பெயரும் என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்காகவே இப்படி பெயரை மாற்றிக் கொண்டுள்ளேன்” என கூறியுள்ளார்.