ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா, தமிழில் கடந்த 2005-ல் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே டில்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான 'சாபட்' படத்தில் நடித்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதாகும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷித் என்ற மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடக்க உள்ளது . நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமண தகவலை மீரா சோப்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.