இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் கேரளாவையும் தாண்டி தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இங்கே தமிழ் படங்களை காட்டிலும் தியேட்டர்களில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. படம் பார்த்த பிரபலங்கள் அனைவருமே இந்த படத்தை மனம் விட்டு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக எப்போதுமே தென்னிந்திய படங்களை அதிலும் தமிழ் மற்றும் மலையாள படங்களை ரசித்து சிலாகித்து பாராட்டி வரும் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தை பார்த்துவிட்டு பிரமிப்பு விலகாமல் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “சிம்பிளான அதே சமயம் அசாதாரணமான ஒரு சினிமா படைப்பு. இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் மேக்கிங்கை விட ரொம்பவே சிறப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை. அந்த அளவிற்கு சாத்தியமில்லாத கதை சொல்லும் முறை.. இந்த ஐடியாவை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி எப்படி விற்க முடிந்தது என நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தியில் இது போன்ற ஐடியாக்களை ரீமேக்கில் மட்டும் தான் செய்கிறார்கள். உண்மையிலேயே புத்திசாலித்தனமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வரும் மலையாள படங்களின் பின்னால் வெகு தொலைவில் ஹிந்தி சினிமா இருக்கிறது” என்று கூறியுள்ளார்.