திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சமீபகாலமாக ரசிகர்கள் பலர் நடிகர்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொள்கின்றனர். அப்படித்தான் சமீபத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ் ஆகியோரிடம் சில மாணவர்கள் நீங்கள் எங்களது பதிவில் கமெண்ட் இட்டால் தான் நாங்கள் தேர்வுக்கு படிக்க துவங்குவோம் எனக் கூற அவர்களும் அதேபோல செய்தார்கள். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் தி பேமிலி மேன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா சரியாக மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகி விடும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகவே ரசிகர் ஒருவர், “எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருப்பது ? எப்போது தான் டீசரை வெளியிடுவீர்கள் ? என்ன நடக்கிறது இங்கே ?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு ரொம்பவே கூலாக பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “ஸாரி டியர்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் டீசர் வெளியாகி விடும்.. அதற்கான அப்லோடிங் போய்க் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சுவது போன்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் விஜய் தேவரகொண்டா இப்படி நடந்து கொள்வது தனது படத்தின் புரமோசனுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.