தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது |
இயக்குனர், நடிகர் ஜிஎம் குமார் தன் முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1986ல் பிரபு, ராம்குமார், பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அறுவடை நாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். பின்னர், “பிக் பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம்” ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். 2006ல் வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமாக ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜிஎம் குமார் நேற்று பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,“எனது எக்ஸ்-ஐப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றேன். மெட்ராஸ், பெங்களூரூ, கோவா, பாம்பே, மெட்ராஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.
“கடந்த 30 வருடங்களாக பாம்பேக்கு டிரைவிங் செய்தே போய் வருகிறேன். நான் அவளுடன் டிரைவிங் போவேன், ஆனால், இப்போது விதி மாறிவிட்டது. அவளைப் பார்க்கத் தனியாகச் சென்றேன்,” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன் முதல் பட கதாநாயகியாக நடிகை பல்லவியைக் காதலித்து மணந்து கொண்டவர் ஜிஎம் குமார்.