மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி எட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சுமார் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த திலீப் இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையானது இப்போது வரை சிறிய இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திலீப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என விசாரணை குழு தரப்பிலிருந்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
திலீப்பிற்கு ஜாமின் வழங்கியபோது அவர் வெளியில் சென்று சாட்சிகளின் மனதை கலைப்பது, சாட்சியங்களை அழிப்பது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இடைஞ்சல்கள் கொடுப்பது உள்ளிட்ட எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிய விதிமுறைகளை திலீப் மீறிவிட்டார்.. அதனால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அதில் காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவுப் பகுதியை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் திலீப்பின் ஜாமினை ரத்து செய்வது வேறு சில சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம் என்று கூறி ஜாமினை ரத்து செய்ய மறுத்துவிட்டது.