இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி | ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4' | இது புதுசு: ஆடியோ ஓடிடி துவக்கம் | விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது: ரஜினிகாந்த் புகழாரம் | 'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது |
பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இப்படத்திற்கு, ‛மகாராஜா' என்று டைட்டில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராஜமவுலி. அதோடு, ‛‛மகேஷ் பாபுவை வைத்து நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை,'' என்றும் அவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.