அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி, இயக்கி உள்ளார். இதுதவிர வெள்ளித்திரையில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே இவர் நடித்தார். குறிப்பாக எஸ்வி சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்டோரின் நாடகங்களில் பணியாற்றி உள்ளார்.
‛‛சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெசஸ் ரமணி, பிரேமி, இரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள்...'' உள்ளிட்டவை சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.