இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய், வெங்கட் பிரபுவிடம் எடுக்கப்பட இருக்கும் காட்சி குறித்து சீரியசாக தனது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அருகில் இருந்த வைபவ்வோ இதுபற்றி எதுவும் புரியாதவர் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜய் அவரிடம் என்னடா முழிக்கிற உனக்கு எதுவும் சந்தேகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு கதை தெரியும்.. அதனால் நீங்கள் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்றே தெரியாது என்று கூற உடனே விஜய் சிரித்து விட்டாராம். படம் துவங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது இன்னுமா கதை தெரியவில்லை என்று கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அவனுக்கு எல்லாமே தெரியும் என்று கூறி சமாளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார் வைபவ்