இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த வருடத்திலிருந்து துவங்கி கடந்த வாரம் வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் மம்முட்டியின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதுடன் பொதுவான சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.. குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் மம்முட்டி வித்தியாசமான கதை அம்சம், வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவது 72 வயதிலும் சினிமா மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த 80 வயது கிழவராக தோன்றி ஆச்சரியம் அளித்தார் மம்முட்டி. அதற்கு முன்னதாக வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக தனக்கே உரிய மிடுக்கான தோற்றத்தில் மிரட்டினார். இந்த நிலையில் தற்போது போக்கிரி ராஜா, மதுர ராஜா என ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய புலி முருகன் புகழ் இயக்குனர் வைசாக்கின் இயக்கத்தில் டர்போ என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்த நிலையில் இதன் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மம்முட்டியும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரணைக்காக சுவர் ஓரமாக உட்காரவை வைக்கப்பட்டுள்ளது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புலி முருகன் படத்திற்கு பிறகு மதுர ராஜா, மான்ஸ்டர் என இரண்டு படங்களில் சறுக்கிய இயக்குனர் வைசாக் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என துடிப்புடன் பணியாற்றி வருவதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.