அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி |
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை தேடி வரும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்காக வைத்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சென்னை வந்து அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு அதில் ஒரு ரசிகர் இறந்து விட்டார். இதன் காரணமாக தற்போது ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை சென்னையில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி போட்டோசூட் நடத்தினேன். அப்போது திரும்பிச் செல்லும்போது ஒரு ரசிகர் விபத்தில் இறந்துவிட்டது எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்தது. அதனால் இனிமேல் எனக்காக ரசிகர்கள் பயணம் செய்யக்கூடாது என்ற முடிவை எடுத்து உள்ளேன். நாளை(இன்று) முதல் ரசிகர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். அதன் முதல் கட்டமாக விழுப்புரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள செல்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.