ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து சமீபகாலமாக தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான அமர்தீப் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர்.