ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து சமீபகாலமாக தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான அமர்தீப் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர்.