முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க 'வாடிவாசல்' படம் பற்றிய அறிவிப்பை 2021ம் வருடம் ஜுலை மாதம் 16ம் தேதி அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.
'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக, சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது. படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதனுடன் பழகி பயிற்சி எடுத்தும் வந்தார் சூர்யா. 2022 தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட அந்தக் காளையைப் பிடித்துக் கொண்டு அவர் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இப்படம் கடந்த மூன்று வருடங்களாக ஆரம்பமாகாமல் இழுபறியில் இருந்து வருகிறது. அதற்கான காரணம் என்னவென்பதும் தெரியவில்லை. படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாத வரையில் தெரியப் போவதில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 'வாடிவாசல்' பற்றி பல்வேறு விதமான தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்றும், சூர்யா விலகிவிட்டார் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், குறுகிய காலத் தயாரிப்பாக 'அயலான்' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்தான் சுதா படத்தில் நடிக்கப் போகிறார் என்ற புதுத் தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த சில வருடங்களாக சூர்யாவின் பட வரிசையில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 'வாடிவாசல்' படத்திற்கு வழி கிடைக்குமா, கிடைக்காதா என்பதை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக சொன்னால்தான் உண்மை என்ன என்பது தெரியும். காத்திருக்கும் ரசிகர்களை தவிக்கவிட மாட்டார்கள் என நம்புவோம்.