திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் திலீப். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் இவரது திரையுலக பயணம் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரும் தமன்னாவும் இணைந்து நடித்த பாந்த்ரா என்கிற படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும் ஓரளவு தான் அந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக தங்கமணி என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப். ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து உண்மை கதையாக இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படி சமீபகாலமாக சீரியஸான படங்களில் நடித்து வந்த திலீப் மீண்டும் தனது வழக்கமான காமெடி பாணிக்கு திரும்பியுள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு பவி கேர்டேக்கர் என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது திலீப்பின் 149வது படம் ஆகும். முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை, நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வினீத் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த ஆயாள் நானல்ல என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.