ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

திமிரு படம் மூலம் தமிழ் திரை உலகில் சிறிய அளவில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் விநாயகன் கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தாலும் பல காட்சிகளில் நகைச்சுவையாக நடிக்கவும் தவறவில்லை.
அதேபோல மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது சீரியஸான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது இவர்கள் இருவரும் தெக்கு வடக்கு என்கிற படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை பிரேம் சங்கர் என்பவர் இயக்குகிறார். வரும் பிப்ரவரி 12ம் தேதி துவக்க விழா பூஜையுடன் இந்த படம் துவங்க இருக்கிறது. படத்தின் டைட்டிலிலேயே தெக்கு வடக்கு என இருப்பதால் இரண்டு நடிகர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.